கோவையில் அமைதியை நிலைநாட்ட நவ.17ஆம் தேதி அமைதி ஊர்வலம் - டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் பொருட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசியதாவது, கோவையில் வெடிகுண்டு மற்றும் இன, மத, கலவரங்கள் நடைபெறுவதை முறியடித்து கோவை மாநகர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

கோவை மாநகரில், அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் வரும் 17-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத, மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள கூடிய வகையில், ஒரு அமைதி பேரணியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள முன்வர வேண்டும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மின்சார கட்டணம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த நிலையில், ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் கட்டணத்தை குறைக்காமல், மேலும் உயர்த்தியுள்ளது.

மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, மாதம் ஒரு முறை மின் கட்டணம் அளவீடு செய்யும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும்.

24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தி நாளை விருதுநகரிலும், நவம்பர் 3-ம் தேதி தென்காசியிலும், நவம்பர் 4-ம்தேதி திருநெல்வேலியிலும், நவம்பர் 5-ம் தேதி தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...