கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர் பள்ளி, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72 வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதற்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவ - மாணவிகளிடையே பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி. அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், பள்ளியில் கூடுதல் ஆய்வுக்கூடங்கள் உணவு அருந்தும் அறை மற்றும் மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை திட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆன்ந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...