ஈச்சனாரி அருகே எலக்ட்ரீசீயனாக பணியாற்றி வரும் பிரேந்திரா சிங் வேலை முடிந்து நடந்து சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், ரூ.6,000 பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளது.
கோவை: டெல்லியை சேர்ந்தவர் பிரேந்திரா சிங்,இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு ஈச்சனாரி அருகே உள்ள கல்லூரியின் பின்புற சாலையில் தனது தங்கும் விடுதி நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள்அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் இருந்து ரூ.6,000 ரொக்கம், செல்போன், கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரேந்திரா சிங் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஈச்சனாரி அருகே நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு ஈச்சனாரி அருகே உள்ள கல்லூரியின் பின்புற சாலையில் தனது தங்கும் விடுதி நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள்அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் இருந்து ரூ.6,000 ரொக்கம், செல்போன், கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரேந்திரா சிங் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஈச்சனாரி அருகே நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.