கோவை ஈச்சனாரி அருகே டெல்லி இளைஞரை மிரட்டி வழிப்பறி - 3 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈச்சனாரி அருகே எலக்ட்ரீசீயனாக பணியாற்றி வரும் பிரேந்திரா சிங் வேலை முடிந்து நடந்து சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், ரூ.6,000 பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளது.


கோவை: டெல்லியை சேர்ந்தவர் பிரேந்திரா சிங்,இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு ஈச்சனாரி அருகே உள்ள கல்லூரியின் பின்புற சாலையில் தனது தங்கும் விடுதி நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள்அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அவரிடம் இருந்து ரூ.6,000 ரொக்கம், செல்போன், கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரேந்திரா சிங் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஈச்சனாரி அருகே நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...