வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகளில் தெரு விளக்கு சரியாக எரியாத நிலையில் இன்னும் முறையாக சரி செய்யபடாததால் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் தெருவிளக்கு ஒப்பந்தம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சியில் இன்று நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம்வள்ளி மற்றும் துணை தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த நிலையில் நாளை 1.11.2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தினம் கொண்டாடும் வகையில் வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.



அப்போது வால்பாறையில் 21 வார்டுகளில் 62 எஸ்டேட்டுகளில் தெரு விளக்கு சரியாக எரியாத நிலையில் கடந்த மூன்று மாதம் நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு பிரச்சனை பற்றி வார்டு உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரியாததால் கரடி யானைகள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் கரடி தாக்குதல் அதிகரித்து வருகிறது என்று நகர மன்ற கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் நகர மன்ற கூட்டத்தில் பலமுறை நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூறியும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதது ஏன் என்று துணை தலைவர் செந்தில் 9 வது வார்டு கவுன்சிலர் மகுடேஸ்வரன் 17 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் 15 வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பினர்.

திமுக ஆட்சியில் கெட்ட பெயர் ஏற்படுத்தாதீர்கள் உடனடியாக தெருவிளக்கு பிரச்சனையே சரி செய்ய வேண்டும் சரி வர பணி செய்யாததால் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூச்சலியிட்டனர். பின்பு நகர மன்ற தலைவர் தெரு விளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...