பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் இன்று காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலிஸார் கைது செய்தது. இந்த கஞ்சா விற்பனை கைதில் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கஞ்சா வத்திருந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில் அவர் கிணத்துக்கடவு நல்லட்டி பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சூரிய பிரகாஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் ஊஞ்சவேலம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது கஞ்சா விற்றதாக சூலூர் மற்றும் செஞ்சேரி குமாரபாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சாந்தலட்சுமி (59) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது .
இதே போல் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் அருகே நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த பிரதீப் (22) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் போலீசார் அங்குள்ள ஒரு பேக்கரி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக அன்னூர் ரோட்டை சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கஞ்சா விற்ற குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைக்கபட்டனர்.