கோவை மதுகரையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி சின்னையன் என்பவர் தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: மதுக்கரை வழுக்கு பாறை பகுதியில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியில் தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் (47) என்கிற கட்டிட தொழிலாளியும் பணிபுரிந்து வந்தார். இவர் ரத்தினபுரி எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து தினமும் கட்டிட வேலை செய்து வருகிறார் .
இன்று வழக்கம் போல கட்டிட பணியில் இருந்த போது தற்செயலாக திடீரென்று கால் இடறி மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்த சின்னப்பனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து அவரது மகன் செல்லதுரை மதுக்கரை போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் வைரம் இவ்வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இன்று வழக்கம் போல கட்டிட பணியில் இருந்த போது தற்செயலாக திடீரென்று கால் இடறி மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்த சின்னப்பனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து அவரது மகன் செல்லதுரை மதுக்கரை போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் வைரம் இவ்வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.