நீலகிரி மசினகுடி காட்டு பகுதியில் ரோந்து பணியில் இருந்த வன காவலரை காட்டெருமை தாக்கிய நிகழ்வு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் வனதுறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது புதர்மறைவில் மறைந்து இருந்த காட்டெருமை திடீரென ரோந்து பணியில் இருந்த சசிதரனை என்கிற வன காவலரை தாக்கியது.
இதனால் சசிதரன் அவா் படுகாயமடைந்தாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் சசிதரன் அவா் படுகாயமடைந்தாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.