மேட்டுப்பாளையம் மலைபாதையில் கார் கவிழ்ந்து திருப்பூரைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட கார் விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.



நீலகிரி: திருப்பூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தனது குடும்பத்தினர் உட்பட 9 பேருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக திங்கள் கிழமை காரில் வந்துள்ளனர். 

வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை திருப்பூர் முருகன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

அப்போது மலைபாதையில் குரும்பாடி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.



கார் மோதியதில் மரம் சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பிகள் கார் மீது விழுந்தன. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த 5 ஆம்புலன்ஸ்கள் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதனால் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே இரண்டாவது சீசன் முடிவடைய இருப்பதால் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதையடுத்து போலீஸார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குன்னூர் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...