கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற ஆதரவற்ற மூதாட்டி, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள்(80). இவரது கணவர் சுந்தர்ராஜ் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூதாட்டி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்துள்ளது.
அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 15,000 ரூபாய் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்த மூதாட்டி மாரியம்மாள், ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.
இந்நிலையில் மூதாட்டி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்துள்ளது.
அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 15,000 ரூபாய் இருந்துள்ளது.
இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்த மூதாட்டி மாரியம்மாள், ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.