கோவையில் செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற ஆதரவற்ற மூதாட்டி, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள்(80). இவரது கணவர் சுந்தர்ராஜ் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூதாட்டி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்துள்ளது.

அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 15,000 ரூபாய் இருந்துள்ளது.



இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்த மூதாட்டி மாரியம்மாள், ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...