சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் சமீரன் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவை: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்த வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தவர் வல்லபாய் படேல் என்றால் அது மிகையல்ல.
கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர் வல்லபாய் படேல். அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சர்தார் வல்லப்பாய் படெலின் 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியினை வாசிக்க தொடர்ந்து, அனைத்து துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர் வல்லபாய் படேல். அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சர்தார் வல்லப்பாய் படெலின் 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியினை வாசிக்க தொடர்ந்து, அனைத்து துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.