கோவை மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் சமீரன் உத்தரவு…!

கோவை தெற்கு, அன்னூர் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 17 வட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 வட்ட ஆட்சியர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள கல்பனா அலமேலு கோவை தெற்கு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த பணியில் இருந்த சரண்யா, கோவை வடக்கு குடிமை பொருள் தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனைமலை வட்ட ஆட்சியராக மாரீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனைமலை வட்ட ஆட்சியராக இருந்த பானுமதி, பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள முருகேசன் மதுக்கரை வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை வட்ட ஆட்சியராகஇருந்த பர்சானா ஆதி திராவிடர் நலத்துறை நிலை எடுப்பு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக நித்தியவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.வால்பாறை வட்ட ஆட்சியராக ஜோதிபாசு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பணியாற்றிய விஜயகுமார் பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியர் ரமேஷ் குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கில் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த ரமேஷ் தெற்கு தாலுக்கா கலால் மேற்குப் பார்வையாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். அன்னூர் வட்ட ஆட்சியராக தங்கராஜ்நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்த சிவக்குமார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி டி.ஆர்.ஓ வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுக்கரை சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராக ரேணுகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு கலால் மேற்பார்வை முன்னாள் அலுவலர் ஜெயசித்ரா சிப்காட் நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியர் ரங்கராஜன், நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...