கோவை மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் சமீரன் உத்தரவு…!

கோவை தெற்கு, அன்னூர் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 17 வட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 வட்ட ஆட்சியர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள கல்பனா அலமேலு கோவை தெற்கு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த பணியில் இருந்த சரண்யா, கோவை வடக்கு குடிமை பொருள் தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனைமலை வட்ட ஆட்சியராக மாரீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனைமலை வட்ட ஆட்சியராக இருந்த பானுமதி, பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள முருகேசன் மதுக்கரை வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை வட்ட ஆட்சியராகஇருந்த பர்சானா ஆதி திராவிடர் நலத்துறை நிலை எடுப்பு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக நித்தியவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.வால்பாறை வட்ட ஆட்சியராக ஜோதிபாசு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பணியாற்றிய விஜயகுமார் பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியர் ரமேஷ் குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கில் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த ரமேஷ் தெற்கு தாலுக்கா கலால் மேற்குப் பார்வையாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். அன்னூர் வட்ட ஆட்சியராக தங்கராஜ்நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்த சிவக்குமார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி டி.ஆர்.ஓ வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுக்கரை சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராக ரேணுகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு கலால் மேற்பார்வை முன்னாள் அலுவலர் ஜெயசித்ரா சிப்காட் நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியர் ரங்கராஜன், நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...