கோவையில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை 2 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

உக்கடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமார், சந்தேகத்துக்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது தப்பிச்சென்ற அந்த நபரை 2 கி.மீ துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில் அவர் ஒரு இளைஞரை தாக்கி விட்டு வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது.


கோவை: திண்டுக்கல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது, கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் உதவி-ஆய்வாளர் அருண்குமார் நேற்று இரவு உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 இளைஞர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பார்த்த எஸ்.ஐ அருண்குமார் தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார்.

இதனால் அந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருவரில் ஒருவர் தனியாக சென்று மாயமானார். இதனை பார்த்த மற்றொரு இளைஞரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் அருண்குமார் அந்த இளைஞரை துரத்தி சென்றார்.

2 கிலோ மீட்டர் தூரம் விடாமல் இளைஞரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தார். பின்னர் உடனே அவர் அந்த இரு சக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த இரு சக்கர வாகனம் போத்தனூரை சேர்ந்த நபருடையது என்பதும் அவரை தாக்கி விட்டு 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருண்குமார் மடக்கி பிடித்த இளைஞரை உக்கடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.



விசாரணையில் அந்த வாலிபர் காளப்பட்டியை சேர்ந்த ரத்திஷ் (20) என்பது தெரியவந்தது.

பின்னர், போத்தனூரில் இருந்து வாகனத்தை திருடி வந்ததால் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உக்கடம் வந்து அந்த இளைஞரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரு சக்கர வாகனத்தை திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் அருண்குமாரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...