கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி:கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
உணவு தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி முகாமிட்டுள்ளன.

அவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள மிளிதேன் கிராம பகுதிகளில் மிளிதேன் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் பெரிய கரடியொன்று புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் பீதியடைந்து உள்ளனர்.

இது சார்ந்து பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உணவு தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி முகாமிட்டுள்ளன.
அவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள மிளிதேன் கிராம பகுதிகளில் மிளிதேன் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் பெரிய கரடியொன்று புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் பீதியடைந்து உள்ளனர்.
இது சார்ந்து பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.