கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் புது மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து அவகாசம் கேட்டுள்ளார்.


நீலகிரி : கொடநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல்சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முதலாவதாக ஓம் பகதூர்கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த சிபிசிஐடிகாவல் துறையினர் எஸ்டேட் மேலாளர் நட்ராஜ் மற்றும் அப்போது பணியில் இருந்தர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்,

இது தொடர்பாக ஏற்கனவே சயான்,வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் சயான் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினர்.

இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தி்ல் நடந்த வழக்கில்அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



இந்த மனுவில்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார்விசாரணையை துவங்கியுள்ளதால் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதீபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 2 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பிகளாக முருகவேல், சந்திரசேகர், அண்ணா துரை ஆகியோர் சிறப்பு புலனாய்வு விசாரணைஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...