கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார்..!

சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நேற்று இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய காவல் நிலையங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது.



அதனடிப்படையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகள் போலீஸ்காரன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 



குறிப்பாக சுந்தராபுரம், போத்தனூர் சந்திப்பு, ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், புல்லுக்காடு, ரயில் நிலையம், சுங்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனைச் சாவடிகளில் இரவு, பகலாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலா 30 காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 



மாநகர பகுதிக்கு வரும் அனைத்து இரு சக்கர, கார், சரக்கு வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உக்கடம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (RAF) வீரர்களும், கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...