இந்தி திணிப்புக்கு எதிராக பல்லடம் தபால் நிலையம் முற்றுகை - இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் SFI மற்றும் DYFI சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை இரண்டு அமைப்பினரும் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



அதன் அடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழுக்கள் சார்பில் பல்லடம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர்.பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில துணை தலைவர் தோழர்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர்.சௌந்தர்யா, இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

என்.ஜீ.ஆர் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி திணிப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...