சமீபத்தில், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி, இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டமானது, வழக்கமாக நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டமாக இல்லாமால், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் குறித்து முக்கியமாகஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புமட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துதல் குறித்துஆலோசிக்கப்படும் என தெரிகிறது.