கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சமீபத்தில், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி, இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டமானது, வழக்கமாக நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டமாக இல்லாமால், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் குறித்து முக்கியமாகஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புமட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துதல் குறித்துஆலோசிக்கப்படும் என தெரிகிறது.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...