கோவை ஜமாத் அமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாமத் கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜாமத் கூட்டமைப்பினருடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவையில் நிலவி வரும் அசம்பாவித சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த கூட்டத்தில், கோவை மாநகரில் ஏதேனும் தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அனைத்து ஜமாத் அமைப்பினரும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறினார். ஒவ்வொரு இடத்திலும் காவல்துறையினர் அனைத்து மதத்தினரிடமும் கூட்டம் போடப்பட்டு வருவதாகவும் தற்போது அதனை இன்னும் வலுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ரோந்து பணிகள், செக்போஸ்டுகள் அனைத்தும் 24 மணி நேரம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அச்சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்ப்பாட்டம் ,போராட்டம் போன்றவைகளுக்கான அனுமதி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...