கோவை கார் வெடிப்பு: கோவையை கடவுள் காப்பாற்றி இருக்கிறார்; மாநகர உளவுத்துறையின் தோல்வியே காரணம் - மாவட்ட ஐக்கிய ஜமாத் குற்றச்சாட்டு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து மாநகர ஆணையரை சந்திக்க வந்த மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர், அப்துல் ஜப்பார், கோவை மாநகர உளவுத்துறைக்கு அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



கோவை: கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு அசாதாரண சூழல் காரணமாக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஜக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.



அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தீவிரவாத செயலில் ஈடுபட முயற்சி எடுத்திருக்கிறார்கள். கடவுள் தான் கோவை மாநகர மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான தண்டனையை கடவுள் வழங்கி இருக்கிறார்.



இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கோவையில் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து தீவிரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க ஜக்கிய ஜமாத் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு இணைந்தும் செயல்படும்.



மாநகர ஆணையரை சந்திக்க வந்ததன் முக்கிய நோக்கமே மாநகர உளவுப்பிரிவு செயல்படவில்லை என்பதால் தான். அவர்கள் முறையாக அரசுக்கு தகவல் சொல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் குனியமுத்தூர், உக்கடம், பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் புதிதாக போடப்பட்ட உளவுத்துறை காவலர்களை எடுத்துவிட்டு, அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களையே பணியமர்த்த வேண்டும்.

அப்போது தான் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை ஒழிக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...