தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார், அதே பள்ளியில் பணியாற்றும் பேருந்து ஓட்டுனர் ரத்னகுமார் என்பவருடையது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கோவை பீளமேடு அருகே தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண்கொண்ட கார் நிற்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் அதே பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வரும் ரத்தினகுமார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை எடுத்து வந்ததாகவும், காரை பழுது நீக்கும் கடைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.