கோவை பீளமேட்டில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார், அதே பள்ளியில் பணியாற்றும் பேருந்து ஓட்டுனர் ரத்னகுமார் என்பவருடையது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.



கோவை பீளமேடு அருகே தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண்கொண்ட கார் நிற்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் அதே பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வரும் ரத்தினகுமார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை எடுத்து வந்ததாகவும், காரை பழுது நீக்கும் கடைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...