கோவை பீளமேட்டில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார், அதே பள்ளியில் பணியாற்றும் பேருந்து ஓட்டுனர் ரத்னகுமார் என்பவருடையது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.



கோவை பீளமேடு அருகே தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண்கொண்ட கார் நிற்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் அதே பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வரும் ரத்தினகுமார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை எடுத்து வந்ததாகவும், காரை பழுது நீக்கும் கடைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...