இந்திய கடற்படை பணியில் சேர வாய்ப்பு - நவ.6-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை, எலக்ட்ரிகல் என காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கு நவம்பர் 6ஆம் தேதிக்குள் www.joinindiannavy.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.



இந்திய கடற்படையில் காலியாக உள்ள 217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடற்படை சார்பில்வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

இந்திய கடற்படையில்பைலட், பொது சேவை, எலக்ட்ரிகல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

இதில், அதிக பட்சமாக பொதுச் சேவை பிரிவில் 56 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45 இடங்களும், இன்ஜினியரிங் மற்றும் பைலட் பிரிவில் தலா 25 இடங்களும் காலியாக உள்ளன.

இதேபோல், போக்குவரத்து பிரிவில் 20 இடங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணிக்கான 5 இடங்களும் காலியாக உள்ளன.

மேலும், கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15 இடங்களும், கல்வி பிரிவில் 12 இடங்களும், நேவல் கன்ஸ்டிரக்டர் பிரிவில் 14 இடங்களும் என, மொத்தம் ஒன்பது பிரிவுகளில், 217 இடங்கள் காலியாக உள்ளன.

கடற்படை பணியில் சேர விருப்பம் உள்ள, திருமணமாகாத ஆண் மற்றும் பெண் என இருபாலரும், நவம்பர் 6ஆம் தேதிக்குள்www.joinindiannavy.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...