இந்திய கடற்படை பணியில் சேர வாய்ப்பு - நவ.6-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை, எலக்ட்ரிகல் என காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கு நவம்பர் 6ஆம் தேதிக்குள் www.joinindiannavy.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.



இந்திய கடற்படையில் காலியாக உள்ள 217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடற்படை சார்பில்வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

இந்திய கடற்படையில்பைலட், பொது சேவை, எலக்ட்ரிகல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் காலியாக உள்ள 217 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

இதில், அதிக பட்சமாக பொதுச் சேவை பிரிவில் 56 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45 இடங்களும், இன்ஜினியரிங் மற்றும் பைலட் பிரிவில் தலா 25 இடங்களும் காலியாக உள்ளன.

இதேபோல், போக்குவரத்து பிரிவில் 20 இடங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணிக்கான 5 இடங்களும் காலியாக உள்ளன.

மேலும், கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15 இடங்களும், கல்வி பிரிவில் 12 இடங்களும், நேவல் கன்ஸ்டிரக்டர் பிரிவில் 14 இடங்களும் என, மொத்தம் ஒன்பது பிரிவுகளில், 217 இடங்கள் காலியாக உள்ளன.

கடற்படை பணியில் சேர விருப்பம் உள்ள, திருமணமாகாத ஆண் மற்றும் பெண் என இருபாலரும், நவம்பர் 6ஆம் தேதிக்குள்www.joinindiannavy.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...