திருப்பூர் பொங்கலூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து - இருவர் பலியான சோகம்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.


திருப்பூர்: பொங்கலூர் அடுத்த கோயில்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி சின்னராமசாமி(65). இவருக்கு அவினாசிபாளையம் பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலைக்காக கோவில்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான மனோகரன்(60) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து வேலையை முடித்துவிட்டு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனம் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருப்பூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர், இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.



மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராமசாமி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.



இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொகுசு கார் ஓட்டுநர் அழகு என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் படுகாயமடைந்த இருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...