கோவை மதுக்கரை அருகே பாறை உருண்டு வீட்டின் சுவர் இடிந்ததால் பரபரப்பு…!

கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் நேற்று ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மீது இராட்ச பாறைகள் உருண்டு விழுந்ததால் வீட்டின் சுவர் சேதமடைந்தது. விபத்தின் போது, வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அரசு பட்டா வழங்கிய நிலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர் தனது மகள், வசந்தகுமார், பேத்தி சசிகலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை லீலாவதி மற்றும் சசிகலா அவரது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது, வீட்டின் சுவர் மீது ஏதோ மோதியது போல சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து, வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, அருகே இருந்த சிறு பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியது தெரியவந்தது. அப்போது, திடீரென அருகே மற்றொரு இராட்ச பாறை உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியதில், சுவரின் ஒரு பக்கம் உடைந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவறிந்து வந்த மதுக்கரை போலீஸார் மற்றும் மதுக்கரை வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய கவுசல்யா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விபத்தால் வீடு சேதம் அடைந்துள்ளதால், போதிய அரசு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...