விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகையை விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மாசு இல்லா சுற்றுச்சூழலை பேணி காப்பது நமது கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அப்பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கவும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...