வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி - கோவை தம்பதியினர் கேரளாவில் கைது

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கோவை தம்பதியினர் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் கைது.


கோவை: கோவையை சேர்ந்த தன்யா மற்றும் கருணாநிதி தம்பதிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.59 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணம் இழந்தவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொடுக்கபட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மீது கேரளா எர்ணாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் கோவையிலும் அவர்கள் பெயரில் மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது வந்தது.

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை அழைத்து வந்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...