வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி - கோவை தம்பதியினர் கேரளாவில் கைது

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கோவை தம்பதியினர் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் கைது.


கோவை: கோவையை சேர்ந்த தன்யா மற்றும் கருணாநிதி தம்பதிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.59 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணம் இழந்தவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொடுக்கபட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மீது கேரளா எர்ணாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் கோவையிலும் அவர்கள் பெயரில் மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது வந்தது.

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை அழைத்து வந்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...