கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்த அறிக்கையளிக்க 2 மாதம் அவகாசம் - டெல்லி பசுமை தீர்ப்பாயம்

வெள்ளலூர் குப்பை கிடங்கின் நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருக்கு 2 மாதம் கால அவகாசம் டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது பல லட்சம் டன் குப்பைகள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக குப்பை கிடங்கை அகற்ற வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஒரு ஆண்டிற்குள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இதுவரை அங்கிருந்த குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் ஈஸ்வரன் மீண்டும் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குள் வெள்ளலூர் குப்பை கிடங்கு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைக் குவியல்களுக்கு இடையே சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக்குழு வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, குப்பைகளை அகற்ற 15 மாத காலம் அவகாசம் வழங்கியது.

மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பணி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...