கோவை ஆலாந்துறையில் செம்மண் கடத்திய லாரி பறிமுதல் - தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே அனுமதியின்றி ஒன்றரை டன் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் அரசு அனுமதியளித்த அளவை மீறி செம்மண் எடுக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி கனிம வளக்கொள்ளை நடைபெற்றுள்ளதாக கூறி, செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தொண்டாமுத்தூர், ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக செம்மண் எடுத்து கடத்தப்படுவதோடு சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆலாந்துறையில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆலாந்துறையில் நேற்றிரவு கனிமவளத்துறை வட்டாச்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்திய போது லாரியில் இருந்த ஓட்டுநர் திடீரென தப்பியோடினார். இதனையடுத்து லாரியை சோதனை செய்த போது, அதில் 1.5 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலாந்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...