வீரகேரளம் பகுதியில் ஈஷா நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் மின் மயானத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மேற்கு மண்ட கூட்டத்தில் 41வது மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு.
கோவை மாநகராட்சியில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளத்தில் செயல்பட்டு வரும் மின் மயானம் ஈஷா நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மின் மயானத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, 41வது மாமன்ற உறுப்பினர் சாந்தி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இந்த மின்மயானத்தில், நிர்ணயிக்கப்பட்ட எரியூட்டும் கட்டணத்தை விட பொது மக்களிடம் அதிகமாக கட்டாய கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூல் செய்யப்படுவதால், பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த மின் மயானத்தை பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக கட்டண விபரங்களை விளம்பர பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நடைபெற்ற கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மின் மயானத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, 41வது மாமன்ற உறுப்பினர் சாந்தி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இந்த மின்மயானத்தில், நிர்ணயிக்கப்பட்ட எரியூட்டும் கட்டணத்தை விட பொது மக்களிடம் அதிகமாக கட்டாய கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூல் செய்யப்படுவதால், பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த மின் மயானத்தை பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக கட்டண விபரங்களை விளம்பர பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நடைபெற்ற கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.