வார்டு எண்: 41 வீரகேரளம் மின்‌ மயானத்தை அரசே பராமரிக்க வேண்டும் - கோவை மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு

வீரகேரளம் பகுதியில் ஈஷா நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் மின் மயானத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மேற்கு மண்ட கூட்டத்தில் 41வது மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு.


கோவை மாநகராட்சியில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மின்‌ மயானம்‌ ஈஷா நிறுவனத்தால்‌ பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மின் மயானத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, 41வது மாமன்ற உறுப்பினர் சாந்தி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இந்த மின்மயானத்தில், நிர்ணயிக்கப்பட்ட எரியூட்டும்‌ கட்டணத்தை விட பொது மக்களிடம்‌ அதிகமாக கட்டாய கட்டணம் வசூல்‌ செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூல் செய்யப்படுவதால், பெரும்‌ சிரமத்திற்கும்‌, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



எனவே இந்த மின்‌ மயானத்தை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி கோவை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும். மேலும்‌ தற்காலிகமாக கட்டண விபரங்களை விளம்பர பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.



இவ்வாறு நடைபெற்ற கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...