தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் - கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

பாஜகவை பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், மத்திய பாஜக. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை என அறிக்கை



கோவை: தி.மு.க.வினர் நடத்தும் இந்தி பாடம் உள்ள பள்ளிகள், தமிழ் வழியில் படிக்கும் தி.மு.க. நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களால், தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மடைமாற்ற, இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை தி.மு.க. மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கு சம முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் கொள்கை இதுதான். மத்திய பா.ஜ.க. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. இதனைத்தான் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.

தாய் மொழி வழி கல்விக்கு பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. ஆனால், அதனை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன. மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும்,

இந்தியில் அலுவல்கள் நடக்க வேண்டும் என, மத்திய பா.ஜ.க., அரசு கூறவில்லை. புதிய கல்விக் கொள்கையில் கூட, மூன்றாவது மொழியாக இந்தி உட்பட எந்த இந்திய மொழிகளை வேண்டுமானாலும் விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது.

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா?

தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும்.

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான், மருத்துவப் படிப்பை இந்தியில் கற்கும் வாய்ப்பை பா.ஜ.க. அரசு மத்தியப்பிரதேசத்தில் உருவாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் மருத்துவம் படிக்க பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

மருத்துவப் பாட புத்தகங்களை தமிழில் தயாரிக்க உதவியாக, மருத்துவம் தொடர்பான தமிழ் சொற்கள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில்தான் இந்தி திணிப்பு என தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா?

தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும்.

தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...