கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு..!

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, சுகாதார ஆய்வாளர் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பிரிவுகள், கணினி அறை பதிவேடுகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்பங்கள் குறித்தும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி மற்றும் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு ஐடிஐ பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, விடுதிகளில் மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அந்த விடுதிகளில் உள்ள சுகாதார நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.



இதேபோல் கோவை, மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், வரி வசூல் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கு வழங்கப்படும் அனுமதிகள் குறித்தும் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் பொழுது வடக்கு கோட்டாட்சியர் பூமா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...