கோவையில் விதிகளை மீறி அமைக்கப்படும் பட்டாசு கடைகள் - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி திருமண மண்டபங்களில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதுபோன்ற கடைகளால், கடந்த காலங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விதிமுறைகளை மீறி போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பட்டாசு கடைகள் போடுவதற்கான விதிமுறைகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதனால் விபத்துகளும் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகள் மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், முன்னெச்சரிக்கைநடவடிக்கை எதுவும் எடுக்காமல் போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

விதிமுறைகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் விதிமுறைகள் படி போடப்பட்டுள்ளதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்ததவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...