கோவையில் விதிகளை மீறி அமைக்கப்படும் பட்டாசு கடைகள் - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி திருமண மண்டபங்களில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதுபோன்ற கடைகளால், கடந்த காலங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விதிமுறைகளை மீறி போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பட்டாசு கடைகள் போடுவதற்கான விதிமுறைகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதனால் விபத்துகளும் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகள் மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், முன்னெச்சரிக்கைநடவடிக்கை எதுவும் எடுக்காமல் போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

விதிமுறைகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் விதிமுறைகள் படி போடப்பட்டுள்ளதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்ததவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...