கோவை விளாங்குறிச்சி அருகே ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி - மாவட்ட எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

விளாங்குறிச்சி அடுத்த கரட்டுமேடு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 22 பேர் வாங்கிய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம், ராணி செல்லமுத்து ஆகியோர் சொந்தம் கொண்டாடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 பேர் கோவையை அடுத்த விளாங்குறிச்சி, கரட்டுமேடு பகுதியில் 1.95 ஏக்கர் நிலத்தை கடந்த 1985 ஆம் ஆண்டு கிரயம் செய்து வாங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த நிலத்திற்கு ராமலிங்கம் மற்றும் ராணி செல்லமுத்து ஆகியோர் சொந்தம் கொண்டாடி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிலம் வாங்கியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு அடிப்படையில் ராமலிங்கம் மற்றும் ராணி செல்லமுத்து ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தை சொந்தம் கொண்டாடி அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுப்பதாக நில உரிமையாளர்கள் மீண்டும் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.



பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிலத்தை அபகரிக்கும் முயற்சி மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சரி வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ராணி செல்லமுத்து, அவரது மகன் பிரவீன், ராமலிங்கம் மற்றும் சாந்தலிங்கம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து நிலத்தில் அத்து மீறி நுழைந்து கம்பி வேலிகளை ஜே.சி.பி.கொண்டு அகற்றிவிட்டு, தகாத வார்த்தைகளால் மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளனர்.

மேலும் சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நிலத்தை தற்போது அரசியல், பண செல்வாக்கை பயன்படுத்தி சொந்தம் கொண்டாடி மிரட்டுகின்றனர். எனவே வயதான காலத்தில்எந்த பின் புலமும் இல்லாத எங்களது சொத்தை பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...