சுக்ரவார்பேட்டை பகுதியில் நகை பட்டறை உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை.
கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த காஜா ஹுசைன் என்பவர் சுக்ரவார்பேட்டை பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நகை கடைகளுக்கு ஆபரணங்கள் செய்து விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்.ஜி. வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காஜா ஹுசைனுடன் வரவு செலவு வைத்திருந்துள்ளார். விஜயகுமாருடன் அவரது மனைவி விஜயகுமாரியும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில். கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 306 கிராம் தங்க நகை ஆபரணத்தை காஜா ஹுசைன் விஜயகுமாரிடம் விநியோகம் செய்திருக்கிறார். ஆனால் நகைக்கான பணத்தை தராமல் விஜயகுமார் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்க நகைகளையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஜா ஹுசைன் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தபுகாரின் அடிப்படையில் போலிஸார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் 406 மற்றும் 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆர்.ஜி. வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காஜா ஹுசைனுடன் வரவு செலவு வைத்திருந்துள்ளார். விஜயகுமாருடன் அவரது மனைவி விஜயகுமாரியும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில். கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 306 கிராம் தங்க நகை ஆபரணத்தை காஜா ஹுசைன் விஜயகுமாரிடம் விநியோகம் செய்திருக்கிறார். ஆனால் நகைக்கான பணத்தை தராமல் விஜயகுமார் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்க நகைகளையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஜா ஹுசைன் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தபுகாரின் அடிப்படையில் போலிஸார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் 406 மற்றும் 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.