சர்வதேச பேரிடர் இன்னல் குறை தீர்ப்பு தினம்: கோவையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ஆபத்துக் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினரின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சிநடத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும் தன்னார்வலராக செயல்படும் மாணவர்கள் பலருக்கும் இந்த ஒத்திகை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் காலத்தின் போது மீட்பு படையின் போது பயன்படுத்தப்பட கூடியஉபகரணங்கள் குறித்தும்செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல் வெள்ளம் ஏற்படும் போது, ஆபத்துக் காலங்களில் வெள்ளத்தில் மிதந்து வரும் பொருட்களை எவ்வாறு மிதவையாக பயன்படுத்தி தப்பிக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டஏராளமானோர் கண்டு களித்தனர்.





Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...