கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ஆபத்துக் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினரின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சிநடத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தன்னார்வலராக செயல்படும் மாணவர்கள் பலருக்கும் இந்த ஒத்திகை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் காலத்தின் போது மீட்பு படையின் போது பயன்படுத்தப்பட கூடியஉபகரணங்கள் குறித்தும்செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் வெள்ளம் ஏற்படும் போது, ஆபத்துக் காலங்களில் வெள்ளத்தில் மிதந்து வரும் பொருட்களை எவ்வாறு மிதவையாக பயன்படுத்தி தப்பிக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டஏராளமானோர் கண்டு களித்தனர்.