தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, திருப்பூர் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில், மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் பாஸ்கரன், ரோந்து வாகனங்களின் நிலை குறித்த ஆய்வு செய்தார்.
திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குற்றச் சம்பவங்கள் தடுக்கும் பொருட்டுமாநகரப் பகுதியில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அலுவலக வளாகத்தில், மாநகர காவல் ஆணையரகத்திற்குட்படட, காவல் நிலையங்களின் ரோந்து வாகனங்கள் நிலை குறித்து மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், 47 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ரோந்து வானங்கள் இயக்கப்பட வேண்டிய முறை குறித்து காவலர்களுக்கு துணை ஆணையாளர் பாஸ்கரன் அறிவுறுத்தினார்.