சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே இருந்த 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர் சஞ்சய் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக பிடித்துச் சென்று காப்பு காட்டில் விட்டார்.
கோவை: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு உலகில் எந்த உயிரினத்தின் மீதும் இல்லாத பயம் பாம்பின் மீது இருக்கும். அப்படி சாலைகளிலோ, அல்லது குடியிருப்பு பகுதிகளிலோ, பாம்பை பார்த்தால் அவற்றை அடித்து கொல்லாமல் வனத்துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று மக்களிடையே படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடைந்துள்ளது என்பதற்கு சான்றாக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் இன்று நல்ல பாம்பு ஒன்றைப் பார்த்த பொதுமக்கள் அதை துன்புறுத்தாமல், பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்து அதை பத்திரமாக மீட்டனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று படுத்திருந்தது. அதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
பின்னர், அதை துன்புறுத்தாமல் பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவரான சஞ்சய், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர், பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விடுவதாக கூறி எடுத்து சென்றார்.
எங்கேனும், பாம்பை பார்த்தால் அடிப்பதோ அல்லது அதனை நெருங்குவதோ தவறு, பாம்பு பிடி வீரர்களுக்கு அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களே பாம்பை பத்திரமாக மீட்டு சென்று விடுவார்கள் என்று பாம்பு பிடி வீரர் சஞ்சய் மக்களிடம் தெரிவித்தார்.
கடும் விஷம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடைந்துள்ளது என்பதற்கு சான்றாக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் இன்று நல்ல பாம்பு ஒன்றைப் பார்த்த பொதுமக்கள் அதை துன்புறுத்தாமல், பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்து அதை பத்திரமாக மீட்டனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மைதானம் அருகில் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று படுத்திருந்தது. அதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
பின்னர், அதை துன்புறுத்தாமல் பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவரான சஞ்சய், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.
பின்னர், பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விடுவதாக கூறி எடுத்து சென்றார்.
எங்கேனும், பாம்பை பார்த்தால் அடிப்பதோ அல்லது அதனை நெருங்குவதோ தவறு, பாம்பு பிடி வீரர்களுக்கு அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களே பாம்பை பத்திரமாக மீட்டு சென்று விடுவார்கள் என்று பாம்பு பிடி வீரர் சஞ்சய் மக்களிடம் தெரிவித்தார்.
கடும் விஷம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.