கிணத்துக்கடவில் மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

கிணத்துக்கடவு பகுதியில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டனர். புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.



கோவை: கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மளிகை கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். சோதனையில், சிங்கராம்பாளையம் பகுதியில் செல்வராஜ் வயது (50) என்பவரது மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல் வடபுதூரில் உள்ள ஜேம்ஸ் செல்வன் (40) என்பவரது மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட் வைத்திருந்த இருவர் மீதும் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...