கிணத்துக்கடவில் மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

கிணத்துக்கடவு பகுதியில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், சோதனை மேற்கொண்டனர். புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்தனர்.



கோவை: கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் மளிகை கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். சோதனையில், சிங்கராம்பாளையம் பகுதியில் செல்வராஜ் வயது (50) என்பவரது மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல் வடபுதூரில் உள்ள ஜேம்ஸ் செல்வன் (40) என்பவரது மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட் வைத்திருந்த இருவர் மீதும் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...