கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் கொங்குநாடு கால்நடை திருவிழா


வாணவராயர் அறக்கட்டளை, சங்கர் வானவராயர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் கலை, பாரம்பரியம், கட்டமைப்புகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரித்து, பறைசாற்றும் அறப் பணிக்கானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கவும் கொண்டாடவும், ‘கொங்குநாடு கால்நடை திருவிழாவை’ இவ்வறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

பண்டை காலம் முதலே நமது வாழ்வின் ஓர் அங்கமாக வீட்டு விலங்குகள் இருந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடை செல்வங்களின் பங்கு முக்கியமானது. 

தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த கொங்குநாடு கால்நடை திருவிழாவின் நோக்கமாகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக, சமத்தூர், பொள்ளாச்சியில், 2017 பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்க உள்ளன. 

வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை காண 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விழா 108 கோமாதா பூஜையுடன் தொடங்கவிருக்கின்றது. இவ்விழாவுக்கான பதிவு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்வாண்டு கால்நடைக்கான போட்டிகளில் நாய் இனமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...