கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி பிரதீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முதற்கட்டமாக கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). தற்போது இருவரும் சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததுடன், பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் அருகேயுள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரது தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக, பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...