கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் கொங்குநாடு கால்நடை திருவிழா


வாணவராயர் அறக்கட்டளை, சங்கர் வானவராயர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் கலை, பாரம்பரியம், கட்டமைப்புகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரித்து, பறைசாற்றும் அறப் பணிக்கானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கவும் கொண்டாடவும், ‘கொங்குநாடு கால்நடை திருவிழாவை’ இவ்வறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

பண்டை காலம் முதலே நமது வாழ்வின் ஓர் அங்கமாக வீட்டு விலங்குகள் இருந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடை செல்வங்களின் பங்கு முக்கியமானது. 

தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த கொங்குநாடு கால்நடை திருவிழாவின் நோக்கமாகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக, சமத்தூர், பொள்ளாச்சியில், 2017 பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்க உள்ளன. 

வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை காண 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விழா 108 கோமாதா பூஜையுடன் தொடங்கவிருக்கின்றது. இவ்விழாவுக்கான பதிவு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்வாண்டு கால்நடைக்கான போட்டிகளில் நாய் இனமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...