கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளதாக கூறி, பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநேரத்தை முறையாக நிர்ணயித்து பணிச்சுமையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை:கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளதாக குற்றம்சாட்டி, பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு பணிநேரம் தொடர்பாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூய்மைப்பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்து தொடர்ந்து மாலை 6 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும்,இதனால் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த பணிச்சுமை காரணமாக உடல் மற்றும் மன ரீதியாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தூய்மைப்பணி அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணியாக உள்ள நிலையில், தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்ற கட்டாயப்படுத்துவது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்தும், பணிநேரத்தை முறையாக நிர்ணயிக்க வலியுறுத்தியும் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, 12 மணி நேர பணியை கட்டாயப்படுத்தக் கூடாது, தூய்மைப்பணியாளர்களுக்கு முறையான பணிநேரத்தை நிர்ணயிக்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிநேரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் வலியுறுத்தினர்.
திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு பணிநேரம் தொடர்பாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூய்மைப்பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்து தொடர்ந்து மாலை 6 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும்,இதனால் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த பணிச்சுமை காரணமாக உடல் மற்றும் மன ரீதியாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தூய்மைப்பணி அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணியாக உள்ள நிலையில், தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்ற கட்டாயப்படுத்துவது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்தும், பணிநேரத்தை முறையாக நிர்ணயிக்க வலியுறுத்தியும் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, 12 மணி நேர பணியை கட்டாயப்படுத்தக் கூடாது, தூய்மைப்பணியாளர்களுக்கு முறையான பணிநேரத்தை நிர்ணயிக்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிநேரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் வலியுறுத்தினர்.