12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளதாக கூறி, பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநேரத்தை முறையாக நிர்ணயித்து பணிச்சுமையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கோவை:கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளதாக குற்றம்சாட்டி, பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு பணிநேரம் தொடர்பாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தூய்மைப்பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்து தொடர்ந்து மாலை 6 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும்,இதனால் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த பணிச்சுமை காரணமாக உடல் மற்றும் மன ரீதியாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தூய்மைப்பணி அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணியாக உள்ள நிலையில், தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்ற கட்டாயப்படுத்துவது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை கண்டித்தும், பணிநேரத்தை முறையாக நிர்ணயிக்க வலியுறுத்தியும் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, 12 மணி நேர பணியை கட்டாயப்படுத்தக் கூடாது, தூய்மைப்பணியாளர்களுக்கு முறையான பணிநேரத்தை நிர்ணயிக்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிநேரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என தூய்மைப்பணியாளர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...