கோவை மசக்காளிபாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு - பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை.

மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாட்டில், ஊழியர்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மசக்காளி பாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்

இந்த மாநாட்டில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.



மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்பு உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனிவேலு, பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சதீஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...