புனித ஜோசப் பாலிடெக்னிக் சார்பில் கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்


கோவை மாவட்டம் வீரப்பனூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் இவ்வருடத்திற்கான கோவை மண்டல அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.



இப்போட்டிகளின் இறுதியாக இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 2, 3) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், கோவை மண்டல அளவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழாவானது இன்று சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இத்துவக்க விழாவில் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டுக் கொடியை சிறப்பு விருந்தினர் அறிமுகப்படுத்தினார்.



அதைத்தொடர்ந்து, கொடியேற்றுதல், சுடர் தீபம் ஏற்றுதல், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.



புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜே.சுரேஷ் நன்றியுரையும் வழங்கினர்.

மேலும், நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கு கோவை மாநகர போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களும், சுழற்கோப்பைகளும் வழங்கவுள்ளார்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...