புனித ஜோசப் பாலிடெக்னிக் சார்பில் கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்


கோவை மாவட்டம் வீரப்பனூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் இவ்வருடத்திற்கான கோவை மண்டல அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.



இப்போட்டிகளின் இறுதியாக இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 2, 3) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், கோவை மண்டல அளவில் 36 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1100 பேர் கலந்து கொண்டனர்.

இதன் துவக்க விழாவானது இன்று சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இத்துவக்க விழாவில் புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டுக் கொடியை சிறப்பு விருந்தினர் அறிமுகப்படுத்தினார்.



அதைத்தொடர்ந்து, கொடியேற்றுதல், சுடர் தீபம் ஏற்றுதல், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.



புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்புரையும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜே.சுரேஷ் நன்றியுரையும் வழங்கினர்.

மேலும், நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கு கோவை மாநகர போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களும், சுழற்கோப்பைகளும் வழங்கவுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...