மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி பேச்சுப்போட்டி - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, வரும் அக்.12-ல் திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு-ரூ.5,000, 2வது பரிசு-ரூ.3,000, 3ஆம் பரிசு-ரூ.2,000 வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, வரும் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில்பங்கேற்கபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் வினீத் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளைய தினம் (அக்டோபர் 2) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில் பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும்,

கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2,000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...