கோவை துடியலூர் ஜி.என் மில்ஸ் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியில் தாயும் - மகளும் வசித்து வந்துள்ளனர். கல்லூரிக்கு செல்ல மாணவி குளிக்க சென்ற போது மாணவி மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தாய் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.
கோவை: கோவை துடியலூர் ஜி.என் மில்ஸ் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்.
இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (52) மகள் அர்ச்சனா (18) இவர் தனியார் கல்லூரியில் பயோ டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கிருத்திகாவும், அர்ச்சனாவும் நேற்று காலை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அர்ச்சனா கல்லூரிக்குச் செல்ல குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தண்ணீரை சூடு செய்ய ஹீட்டரை போட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்ற கிருத்திகா மகளை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வரும் கல்லூரி பேருந்து வந்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளது. ஆனால், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, கிருத்திகா மற்றும் அர்ச்சனா இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு கிளம்ப குளிக்க சென்ற போது ஹீட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (52) மகள் அர்ச்சனா (18) இவர் தனியார் கல்லூரியில் பயோ டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கிருத்திகாவும், அர்ச்சனாவும் நேற்று காலை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அர்ச்சனா கல்லூரிக்குச் செல்ல குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தண்ணீரை சூடு செய்ய ஹீட்டரை போட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்ற கிருத்திகா மகளை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வரும் கல்லூரி பேருந்து வந்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளது. ஆனால், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, கிருத்திகா மற்றும் அர்ச்சனா இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு கிளம்ப குளிக்க சென்ற போது ஹீட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.